செவ்வாய், 11 மே, 2021

ஓ இறைவா!

 


ஓ இறைவா!

நீ இருக்கிறாய்.

நீ எங்கும் இருக்கிறாய்.

நீ எங்களை காக்கவே இருக்கிறாய்.

உன் அருள் 

உன் இரக்கம்

உன் அரவணைப்பு

எல்லாம் தான் ஒரு பெருங்குடையாய்

எங்களைக்கவிந்து நின்று

காப்பாற்றுகிறது.

உன்னைப்

போற்றி போற்றி என்று

கோடிக்கணக்கான போற்றிகள்

தினமும் பாடுகிறோம்.

ஏதோ சிலர் நாத்திகம் பேசுவதால் 

கடவுளே

நீயுமா நாத்திகம் பேசுவது?

என்ன?

அது சீறியது?

நானா பேசுகிறேன்?

என்னையே நான் இல்லை என்றா

சொல்கிறேன்..

அதன் சீற்றம் அடங்கவில்லை.

பார்!

பெருந்தொற்று காரணமாய்

கூட்டம் சேர்க்காமல்

உனக்கு சேரவேன்டிய 

பூசனைகள் குடமுழுக்குகள் 

தூப தீபங்கள்

எல்லாம் காட்டுகின்றார்களே

இவர்கள்.

தங்கள் வீட்டில் பிணங்களைக்

குவித்துக்கொண்டாவது

உனக்கு 

குவிக்க வேண்டிய பூக்கள்

கொட்ட வேண்டிய பால் தேன்

இவைகளுக்கு 

இவர்கள் பாக்கி வைக்கவில்லையே.

நீ இருக்கிறாய்

என்று தானே

தங்கள் கண்ணீர் வழியாகவேனும்

உன்னை தரிசனம் செய்கிறார்கள்.

நீ இருக்கிறாய் என்று

அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த போதும்

நீ இல்லை 

என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.

மக்கள் களிப்புடன் 

நிறைத்துக்கொள்ளும் தெருக்கள் 

விழாக்கள் இன்றி

வெறிச்சோடுகின்றன.

இப்போது

நீ தான் நாத்திகன்.

நான் இல்லை என்று நீ

"இந்த பாலைவனத்தை"

எங்களுக்கு காட்டுகிறாய்.

கேவலம்

நுண்ணுயிரியிலும் நுண்ணுயிரி

அதுவா

உன் பிரம்மாண்ட தேர்களை

நிறுத்துவது?

கடவுளே நீயும் நாத்திகன் ஆனாய்.

தடுப்பூசி எனும் அறிவியல் கொண்டு

இந்த நாத்திகன் தான்

உன் தேர்களை மீண்டும்

ஓட வைக்க வேண்டுமா?

கேட்டால்

இது உன்னை நான் செய்யும் சோதனை என்று

மழுப்பவேண்டாம்.

நீ இல்லை என்று எங்களுக்கு

தெரிவிக்கவே 

இந்த "மரண மழை" பெய்கிறது

என்கிறான் நாத்திகன்.

சரி!போகட்டும்.

இப்போது நாங்கள் எதைக்கும்பிடுவது?

உன்னையா?

இல்லை 

அந்த வினோத ம்யூட்டென்ட் ப்ரொடீன்

வைரஸையா?

அவனும் முழித்தான்.

இவனும் முழித்தான்.

எட்டு திசைகளிலிருந்தும் 

கப்பல் கப்பலாய்

தடுப்பூசிகள் வந்து இறங்கின.

________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக