வியாழன், 6 மே, 2021

கமலின் தோல்வி



கமலின் தோல்வி

தமிழகத்துக்கு தோல்வி என்று

ஒருவர் 

உருகி எழுதியிருந்தார்.

நடிப்பில் 

பலப்பல கோணங்கள் காட்டியவர்

தமிழ் மீதும்

இந்த சமுதாயத்தின் 

கூர்மை மீதும்

ஏன் வெறும் கோணல்களைக்

காட்டினார்?

கமல் 

திரையிலிருந்து

தரைக்கு வந்தது

பற்றி

எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

ஆயினும் 

அவர் மீது ஒட்டியிருக்கும்

அரிதாரத்தை 

முழுவதும் துடைத்து விட்டதாக‌

தோன்றவில்லை.

முகம் பார்க்கும் கண்ணாடியில்

தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே

தெரு மேடைகளில்

மைக் பிடித்து பேசிய்து

போல் தான் 

உலா வந்து போனார்.

மக்களின் மையம் என்றால்

மக்களின் இதயம் தானே.

அந்த இதயத்தின் 

மையத்தை இவர் தொடவே

இல்லை

அறிவு ஜீவித்தனம் 

கேள்விப்பட்டிருக்கிறோம்.

அறிவு அற்பத்தனம் என்றால்

என்ன?

நான் தான் காலையில் எழுந்து

உங்களுக்கு வெளிச்சம் தர நினைத்தேன்.

ஆனால் 

இந்த சூரியன் என்னைப்பார்த்து

காப்பி அடித்து விட்டது

என்று சொல்வது போல்

அலட்டிக்கொள்வது தான் அது.

கமல் 

இப்படி ஒரு 

"உதாரண புருஷர்"

மீண்டும் வென்று வரட்டும்.

அவருக்கு நம்

வாழ்த்துக்கள்!

____________________________செங்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக