சனி, 15 மே, 2021

பாலயோகி பாலா


https://www.youtube.com/watch?v=_md8CyZFT3w

https://www.youtube.com/watch?v=WCqtC7sVglo


பாலயோகி பாலா அவர்களின்

இந்த ஆர்மோனிய இசையும்

அதை அவர் இயக்கும் நேர்த்தியும்

ஒரு அருமையான காவியம்.

அம்பதுகளில் வந்த‌

இந்த சினிமாப்பாட்டு

(எந்தன் உள்ளம் துள்ளிவிளையாடுவதும் ஏனோ?)

எம்பதைத் தொடப்போகும்

என் செவிகளுக்குள்

ஒரு இசை பிருந்தாவனத்தை

பதியம் இடுகிறது.

இசையின் இன்னருவி திருமதி பி சுசீலா

அவர்களின் பாடலும்

அந்தப்பாடலுக்கு திருமதி லலிதா அவர்களின்

நடனமும் மிக மிக அற்புதமானது.

அவர்களின் நளினமான கைகள்

நாகம் போல் நெளியும் அழகும்

ஒப்பற்ற ஒரு காவியம்.

அதை அப்படியே

ஆர்மோனியக்கட்டைகளில்

அரங்கேற்றித்தரும்

திரு பாலயோகி பாலா அவர்களின்

தேனொலி அருவி

என்னுள்ளே நயாகராவாய்

பாளம் பாளமாய் ஓசையின்

இனிமையைக்கொண்டு போர்த்துகிறது.

அவர் திறமைக்கு

என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

___________________________________________ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக