ஞாயிறு, 16 மே, 2021

ஈசல்களின் சிறகுகள்.

 கிராமங்கள் நாட்டின் 

முதுகெலும்புங்கிறாங்களேன்னு பார்த்தா 

நகரங்களின் அக்கிரமத்துக்கு 

ப்ளூப்ரின்ட் அல்லது ஸ்கெலிட்டன் அங்கே தான் இருக்கா? 

முதுகெலும்புன்னா இது தான் அர்த்தமா? 

உண்மைகளின் பரிமாணாங்கள் இப்படியும் இருக்கின்றனவா?

என்று எண்ண வைக்கிறது......

இவர்கள் சாதிமதக்கொடிகள் தூக்கி 

அரசியல் நடத்துவதைப்பார்த்தால்.

இன்று சாதிவெறியின் கொடுமையாக 

பேசப்படும் "கௌரவக்கொலையின்" 

மூலக்களமே அங்கு தான் இருக்கிறதோ? 

ஒரு யதார்த்தத்தின் நெருடல்களை 

சினிமாக்களின் "தேசிய விருது"கள் 

நன்றாகவே அம்மணமாய் காட்டி விடுகிறது.

பாரதிராஜா அவர்கள் "கிராமராஜா"வாக 

படம்பிடித்துக்காட்டியதெல்லாம் 

லேண்டட் ஜென்ட்ரி எனும் 

இந்த 

மினி அடக்குமுறை ராஜ்யங்களைப்பற்றி தானே!


நான் இன்னும் "கர்ணன்"பார்க்கவில்லை.

அதில் 

குதிரை வருகிறது.

வாளேந்திய தனுஷ் வருகிறார்.

அருவாள் வருகிறது.

உணர்ச்சிக்கொப்புளங்கள் இருக்கின்றன.

நியாயத்துக்கு

சீற்றங்கள்

படமெடுத்து இந்த படத்தில் 

ஆடுகின்றன.

விழிகள் கங்குகள்.

கை நரம்புகளில் எரிமலை வெடிப்புகள்.

இப்போது

இவை தான் ஃபார்முலாப் படங்களா?

கிராமத்து ட்யூன்களில்

பிரபஞ்ச வெள்ளம் பெருக்கெடுப்பதாய்

ஓசைக்குள்ளும்

பச்சை ரத்தத்தின் சத்தங்கள் தான்.

வெறும் "பேருந்து நிறுத்தம்"

இந்த கிராமத்து ஈசல்களின் சிறகுகளை

விடியல் நோக்கிய ஏவுகணைகளாய்

மாற்றிவிடுமா?

_________________________________________________ 



 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக