வியாழன், 27 மே, 2021

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

_____________________________________


எழுத்து 

நீரலைகளின் குளம்.

அதில் 

எறிவது எதுவாய் இருப்பினும்

வட்ட வட்ட விரிவலைகளை

அது 

பரப்பிக்கொண்டே இருக்கும்.

ஆம்.

அங்கே

எறிந்தது

கல்லுக்குப்பதில்

வைரம் என்றால்

இந்த உலகின் இருட்டு மூலைகள்

எல்லாவற்றிலும்

ஒளியின் கசிவு தானே இருக்கும்.

கவிப்பேரரசு

நம் தமிழ் நாட்டின்

ஒளிக்களஞ்சியம்.


_____________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக