செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கவரி

 







கவரி

______________________________ருத்ரா


என் இமைகள் மீது

எத்தனை ஆயிரம் டன்களை

பாரம் ஏற்றியிருப்பேன்?

அந்த தூக்கம் இல்லாத‌

கனவுகள் இல்லாத

அந்த மலட்டு இரவுகள்

நட்சத்திரப்புண்களால்

வதை படும்போது

அவன் எழுதிய வரிகள்

என் மீது அனிச்சப்பூ மழை பெய்யும்.

"அன்பே!

என்னைக்காதலி என்று

உன் மீது என்

ஏக்கத்தை இறக்கி வைக்கப்போவதில்லை.

இது ஒரு யுத்தக்களம்.

நம் ஏக்கங்கள் மட்டுமே

இங்கு ஆயுதங்கள்.

சத்தம் இல்லாத யுத்தம்.

எங்கிருந்தோ

எதன் ஆழ்ந்த காயத்திலிருந்தோ

ரத்தம் மட்டும்

கசிந்து கொண்டே இருக்கிறது."

அந்த இறுதி வரி..

என் சமாதி மீது

க"வரி" வீசிக்கொண்டே இருக்கிறது.


________________________________ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக