புதன், 21 ஏப்ரல், 2021

அழைப்பு

 அழைப்பு

_______________________________ருத்ரா


ஆலமரத்தடியும்

கிளி ஜோஸ்யமும் தான்

இந்தியாவின் 

சமூகப்பொருளாதாரம்.

அந்தக்கிளி

எப்போ எடுத்தாலும்

"ராமர் படமும்

அனுமார் படமும்"தான்

வந்து முகம் காட்டும்.

அறிவுஎன்ற வெளிச்சமே 

இல்லாத பூமியில்

இல்லாத கடவுள் எனும்

சொல்லின் கும்மிருட்டே

மண்டிக்கிடக்குது.

பயமும் பீதியும் தான்

இவர்களின் கடவுள்

நம்பிக்கையும் 

மன அடுக்குகளின்

ஆசைத்துடிப்புகளும்

ஏற்றப்பட்ட துடிப்புகளே

இவர்கள் வழிபாடுகள்.

சமுதாயமோ அல்லது

சமுதாய மானிடமோ

எங்கோ தூரத்து நிழலாகி

அதுவும் அரக்க உருவங்களாய்

இவர்களை 

நெறிப்படுத்துவதற்குப்பதில்

வெறிப்படுத்தும்.

அதன் பயங்களும் பயமுறுத்தல்களும்

தான்

இவர்களின் நான்கு வர்ண சித்தாந்தம்.

இதிலிருந்து மீண்டுவர‌

மானிட வளர்ச்சிப்பரிமாணத்தின்

வரலாறு அல்லவா வழி வகுக்கும்.

தேங்கிய மனதுகளின்

உழக்கினில்

கிழக்கு மேற்கு பார்க்கும்

இவர்கள் விடியல் கூட‌

அந்த கிழக்கின் 

சிந்தனை விளிம்புகளில்

இருப்பதன் ஓர்மையை

இழந்து விட்டவர்கள்.

எப்போது இவர்கள் இமையுரித்து

விழிக்கப்போகிறார்கள்.

அதோ கோவிலின்

காண்டாமணியின் நாக்கிலிருந்து

நசுங்கி நசுங்கி வரும்

ஓசைகள் 

அவர்களை கூப்பிடுகின்றன.


_____________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக