புதன், 7 ஏப்ரல், 2021

ஓட்டு

 ஓட்டு

___________________________________ருத்ரா


உளியைத் தந்தார்கள். 

காலடியில் கிடக்கும் கல்லை

சிற்பமாக்கிக்கொள்ளுங்கள் 

என்று.

அது கல் இல்லை. 

ஒரு எரிமலையின் கனவு

என்று உணர்ந்த போது

"வெந்து தணிந்தது காடு"

என்ற பாரதியின் வரிகள் மட்டும்

இங்கே மிச்சம்.


________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக