வெள்ளி, 9 ஏப்ரல், 2021

புதிய மூச்சு!

 புதிய மூச்சு!

_______________________________ருத்ரா


ஒரு அருகம் புல் கூட‌

பச்சையாய்

நிமிர்ந்து நிற்கிறது.

கவிதை சொல்கிறது

தன்னிடம் உட்காரும்

பட்டாம்பூச்சியுடன்.

மனிதனை

மண்புழு ஆக்குகிறதே

இந்த பொருளாதாரம்.

லட்சக்கணக்கான கோடிகள்

வைத்திருப்பவர்கள்

பசித்தால் "லஞ்ச்சுக்கு" அந்த 

மேற்கு தொடர்ச்சி மலையையே

சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

விரும்பினால் அந்த 

இமயமலையையே 

கேக் துண்டுகளாய்

"தாராளமாய்"

வெட்டி எடுத்துக்கொள்ளலாம்

என்பது தான்

"புதுப்பொருளாதாரமா?"

புதிய மனிதனே!

வெறும் புல் அல்ல 

நீ நசுங்கிக் கூழாகிட!

கொஞ்சம் 

இழுத்து மூச்சு விடு

அது போதும்!


____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக