திங்கள், 12 ஏப்ரல், 2021

என்னருமைத் தமிழ்ப்புத்தாண்டே!

 


என்னருமைத் தமிழ்ப்புத்தாண்டே!

________________________________________ருத்ரா


உனக்கு என் வணக்கம்.

எங்கள் வாய்மொழிக்குள் நீ

வரவில்லை என்றாலும்

எங்கள் வாயிலுக்குள் 

வந்து விட்டாயே!

"விருந்து புறத்ததா தானுண்டல் சாவா 

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று"

அமுதமாயினும் அது

விருந்தினருக்கே முதன்மையாய்

படைக்கப்படவேண்டும் என்றான் வள்ளுவன்.

அந்நிய மொழி எனும்

நஞ்சாக நீ இருந்த போதும்

"தமிழ்ப்புத்தாண்டு" எனும்

அமுதம் அல்லவா நீ ஏந்தி வந்திருக்கிறாய்.

புறத்தே வந்த விருந்தே

தமிழ்ப்புத்தாண்டு எனும் அமுதத்தோடு

வந்திருக்கிறது.

சேர்ந்தே உண்ணுவோம்.

அச்சம் தேவையில்லை.

தமிழ் அமுதம் மட்டும் அல்ல.

நஞ்சையும் முறிக்கும் மருந்தும் 

அது தான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் 

எனினும் 

தமிழ் வாழும் வாழும்.

வாழ்ந்து வளர்ந்து வெல்லும் வெல்லும்.


அழையாத விருந்தாளியாய்

அறுபது அறுபது ஆண்டுகளாக‌

வருகிறாயே.

பெயக்கண்டும்  நஞ்சுண்டு அமையும் நயத்தக்க‌

நாகரிகத்தவர் நாங்கள்.

"பிலவ"த் தமிழ்ப்புத்தாண்டுக்கு

எங்கள் வணக்கம்!

_______________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக