ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ருத்ராவின் கவிதைகள்.

 



ருத்ராவின் கவிதைகள்.





சூரியன் 

உறங்குவதும் 

விழிப்பதும்

பூமியின் விளிம்பு தான்.

இது வரை அந்த 

விளிம்பு கைக்கு மாட்டவே

இல்லை.

நானும்  சுத்தியல் ஆணி சகிதம்

ஒரு காலண்டரை

அந்த விளிம்பில் 

மாட்டிவிட முயலுகிறேன்.

சரி.

இது எத்தனையாவது வருடம்?

யாருத்குத் தெரியும்?


___________________________________


இலையோடு

தண்ணீர்த்துளி

ஒட்டவே இல்லை.


துறவு

______________________ருத்ரா


அந்த பாறாங்கல்லை

தூண்டிலில் மாட்டிக் கடலில் வீசி 

கரையில் காத்திருந்தது அந்த‌

மண்புழு.


நம்பிக்கை

___________________________ருத்ரா



சீனாக்காரன் கூட தருகிறானாம்

நம் "ப்ரணவ மந்திரத்தை"

சிலிண்டரில் அடைத்து.


ஆக்சிஜன்

____________________________ருத்ரா


தங்க நாணயங்கள் கீழே.

இலைகள் இடுக்குகள் வழியே

சூரியன் துப்பியது.


ஒளிக்கசிவு

______________________________ருத்ரா



முங்கிகுளித்ததில்

நுரையீரல் பேசியது

ஆறு


____________________ருத்ரா



மரணஇயல் பாடம்

நுரையீரல் 

பல்கலைக்கழகத்தில்.


கொரோனா


____________________ருத்ரா


விமானங்களே

இனி "அணிலாடு முன்றில்"


கொரோனா


_______________________ருத்ரா


சங்கிலி அவர் கழுத்தில்

அது அவரை இழுத்துச்சென்றது.


"வாக்"

_____________________ருத்ரா


இவர்கள் தேசம் முழுவதும்

பத்து எண்களில்.


கைபேசி

________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக