திங்கள், 26 ஏப்ரல், 2021

அந்த தங்கக்குதிரையில்....


தசாவதார காட்சி

நன்றியுடன்

https://www.google.com/search?q=vaigaiyil+alagar...


____________________________

அந்த தங்கக்குதிரையில்
வருபவனா அழகன்?
அவனை மொய்த்த அந்த‌
கோடிக்கால்களின்
மனித பூதங்களே
அழகன் அழகன் பேரழகன்.
மற்றவனே இங்கு கள்ளழகன்.
மக்களில்
அந்த உழைப்பில்
அந்த மகிழ்ச்சியில்
அந்த கண்ணீரில்
அந்த கேள்வியில்
அந்த பாட்டுகளில்
அந்த‌ பசியில்
அந்த‌ உணவில்
அந்த‌ அறிவில்
ஒளிந்து ஒளிந்து
ஆடி அசைந்து
அந்த 
பொய்மெய்க்குதிரையில்
பவனி வருபவனே
கள்ளழகன்.
மக்கள் கடல்
மதுரைக்குள் வரும்
அழகிய திருநாளே
இத்திருநாள்.
"தூணிலும் துரும்பிலும்
இருப்பான்
என்று எத்தனை காலம்
பஜனை செய்தீர்?
நோயிலும் இருப்பான்
நொடியிலும் இருப்பான்.
தங்கக்குதிரையில்
கொரோனாவாக‌
கொள்ளை அழகில்
தரிசனம் தருவான்.
நுண்ணோக்கியில்
காலிங்கன் எனும்
நீண்ட பாம்பாய்
வைரஸ் உருவில்
காட்சி தந்தேன்.
மனிதனின் 
அறிவு நுட்பமே
எங்களுக்கெல்லாம்
வைகுண்டம்.
புரிவாய் இன்று
புதிதாய் இன்று"
வர்ணங்கள் பூசி
மறைக்க முடியா
மகத்தான ஒரு
மக்கள் வெள்ளமே
கண்ணுக்கினிய‌
கருத்தினில் ஒரு
கனவின் 
சூடு ஏற்றி சூடம் ஏற்றும்
அரிய காட்சி இது
அழகுக்காட்சி இது
லட்சக்கணக்காய்
பொற்காலடிகள்
பொருந்திய வைகை
பொழில் தனைச்சூடி
பொலியக்காட்டும்
பொற்கால‌
வரலாறு தன்னை!

இப்படிக்கு
ஒரு மதுரைக்காரன்.

__________________________ருத்ரா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக