புதன், 22 ஜூலை, 2020

எல்லாம் தெரிந்தவர்கள் யார்?




தனக்கு தெரியும் என்பதை
தெரிந்து கொண்டவனும்
தனக்கு தெரியாது என்பதையும்
தெரிந்து கொள்ளாதவனும்
தான்
அக்கரையிலும் இக்கரையிலும்
நின்று கொண்டிருக்கிறார்கள்.

தெரியாது என்பதை
தெரிந்து கொண்டவனும்
தெரியும் என்பதைக்கூட
தெரியாதவனும் தான்

அதோ
அறிவு அறிவின்மை
எனும் வெள்ளத்தில்
நீச்சல் அடித்தும் அடிக்காமலும்
மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் தெரிந்தவர்கள் யார்?

________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக