வெள்ளி, 3 ஜூலை, 2020

மனநல மருத்துவர்.

மனநல மருத்துவர்.
========================================ருத்ரா


மன அழுத்தம் பற்றி
சோதிக்க மருத்துவரிடம் போனார்
ஒரு காவலர்.

"வெறுங்கையோடு வந்திருக்கிறீர்களே
கையில் ஒண்ணுமில்லையே"
என்றார் மருத்துவர்.
காவலருக்கு பகீர் என்றது.
"பீஸ் தானே" என்று மென்று விழுங்கினார்.
"அதைப்பத்தி இல்லை."
"அப்றம் என்ன...
அழுத்தம் சோதிக்க இதோ  வச்சுப்பாருங்க.."
தன மார்பைக்காட்ட 
காவலர் தன் மேல் சட்டையை  
கழற்ற முனைந்தார்.
"அது இல்லைங்க..
கையோட வச்சிருப்பீங்கள்ள 
அதச்சொன்னேன்.."
"எதை.."
இவர் மண்டையைச்சொறிந்தார்.
"அதான்யா..கையில வச்சு 
சொழத்திக்கிட்டே இருப்பீங்களே 
அந்த "லத்தியை"தான் சொல்றேன்.
அத நீங்க எப்படி கையிலே வச்சிருக்கீங்கங்கறத வச்சே 
உங்க சைக்காலஜி மன அழுத்தம் 
எல்லாத்தையும் பரிசோதிச்சரலாம்"...
என்றார் 
அந்த மனநல மருத்துவ வல்லுநர்!

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக