ஞாயிறு, 5 ஜூலை, 2020

வாருங்கள் வாருங்கள்

வாருங்கள் வாருங்கள்
============================ருத்ரா


அந்தக்குட்டி 
மிக அழகாயிருந்தது.
என் பின்னேயே வந்தது.
நான் நிற்குமிடம் அதுவும் 
நின்றது.
என் நிழல்
அதுவாக இருந்தது.
அது வாலை ஆட்டும்போது
எனக்கு கவரி யாக இருந்தது.
ஒரு நாள் 
என் மடியில் வந்து 
மெதுவாக உட்கார்ந்தது.
எனக்கு அது உருகுவது போலவும்
அதுக்கு நான்
உருகுவது போலவும்
எங்கள் கண்கள்
கசிய கசியப்பார்த்துக்கொண்டோம்.
ஆம்.
பார்த்துக்கோண்டே இருந்தோம்.
பார்த்துக்கோண்டே இருக்கும்போது
"நான் விஸ்வரூபம் எடுக்கப்போகிறேன்"
என்றது.
"அட!
அது கூட பிரம்மாண்ட அழகு தான்.
காட்டு"
என்றேன்.
காட்டியது.
ஐயோ!
என்ன கோரம் அது?
என்ன பயங்கரம் அது?
"போதும் 
பழைய நிலைக்கு வா"
என்றேன்.
"ஹா..ஹா..ஹா"
அட்டகாசமாய் சிரித்தது.
"இது அது அல்ல.
உன் அகம் காட்டும் கண்ணாடி."
"என்ன சொல்கிறாய்?"
"இனி என்னைத்தான் நீ
பிம்பம் காட்ட வேண்டும்.
என் விகாரங்களே
உன் தர்மங்கள் நியாயங்கள்.."
அந்த அழகிய குட்டியை எங்கே?
நான் தேடினேன்.
அந்த கண்ணாடி உடைந்து சிதறியது போல்
அந்த கண்ணாடியே பல துண்டுகளாய்
தோற்றம் காட்டியது.
வர்ணங்களாய்..வர்ணங்களாய்
அந்த நிழல் 
இப்போது
என்னையே பிய்த்துத் தின்க விரட்டி
வருகிறது.
தேர் வடம் பிடித்துக்கொண்டு..
கொட்டு மேளம் முழக்கிக்கொண்டு..
புரியாத மொழியை
ராகம் போட்டு முழக்கிக்கொண்டு..
ஏதோ ஒரு கஞ்சாப்பொடியைத் தூவிக்கொண்டு...
வாருங்கள்...வாருங்கள்
என்னைக்காப்பாற்றுங்கள்.

============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக