வெள்ளி, 7 ஜூன், 2019

உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?

உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?
=========================================================ருத்ரா

உனக்கு நட்புன்னா என்னன்னு தெரியுமா?
என்று தோளைத் தட்டி
கையை குலுக்கி
முகங்களில் ஒரு எரிமலையைத்தேக்கி
பல மேனரிஸங்களில்
நடித்துக்காட்டியிருப்பாரே ரஜனி
தளபதி என்கிற "படத்தில்"!

அந்த ரஜனி
உனக்கு ரஜனின்னா என்னன்னு தெரியுமா?
என்று நம் அரசியலுக்கு
பஞ்ச் டைலாக் விட்டுக்கொண்டே இருக்கிறார்.
ஏன் இந்த டேக் ஓகே ஆகவில்லை?

அவருக்கு
"இமேஜ்" மட்டுமே போதும்.
எல்லோரையும் பாராட்டும் அவர் குணமே
அவர் சிகரம்.
சினிமா வெற்றிகளின் சிகரங்கள்
எல்லாம்
செட்டிங்க் அட்டை சிகரங்கள் தான்.
அவர் உலகம் முழுதும்
சிரிக்கிறார்.
சுடர்கிறார்.
அரிதாரங்களையும்
அவதாரங்களையும்
அவர் பொருட்படுத்துவதில்லை.
யாரோ எவரோ
என்று ஒரு இமயமலை பாபாவை
எப்போதும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கும்
ஒரு இமயமலை இவர்.
"இது எப்டி இருக்கு"
என்று
இவரையே ஒரு இமய மலைக்குகை
தியான பாபா
திகைக்க வைத்திருக்கிறார்.
படங்கள் வேறு
ஓட்டுக்கள் வேறு
என்று இவர் கலங்கத்தேவையில்லை.
எந்திரனாக நடித்தவரும்
எந்திரத்துக்குள் எந்திரமாக‌
இருந்து வியூகங்கள் காட்டி
வித்தை காட்டியவரும்
இப்போது ஒரே நேர்கோட்டில் தான்
இருக்கிறார்கள்.

ஆனால் ரஜனி அவர்களே !
உங்கள் திசை வேறு!
உங்கள் வழி வேறு!
ஓட்டுமழை பெய்த வானம்
எப்படி
கர்னாடகா உள்ளாட்சிகளில்
திடீரென்று ஒரு "சஹாராவாய்"
மாறியது?
கம்பியூட்டர்களின் நாடித்துடிப்புகளுக்குள்
எல்லாம் புகுந்து நடித்து
திரும்பி வந்தவர் நீங்கள்!
மனிதன் நினைத்தால்
அந்த இறைவனைக்கூட
"ஹேக்கர்" ஆக்கி  விடுவானோ?
தேர்தல் கூட சினிமா தான்!
அன்புக்குரிய எங்கள் ரஜனி அவர்களே!
உங்கள் "பஞ்ச்" டைலாக்குகளை
நீரூற்றி நந்தவனம் ஆக்கி வைத்திருங்கள்.
இந்த‌
ஜனநாயகத்தை கண்டு மிரண்டு நிற்கும்
நீங்கள் தான்
இந்த ஜனநாயக்காவலராய்
சீற்றத்துடன் ஒரு புதிய பாகுபலியாய்
ஆம்
நீங்கள் கூறிய அந்த ஒற்றைச் சிங்கமாய்
சிலிர்த்தெழ வேண்டும்.
ரஜனி என்றால்
எங்கள் நம்பிக்கை
என்னும் இந்த வரியில்
ஒரு விடியல் உண்டு
என்பதும் எங்கள் நம்பிக்கை.
கூழைக்கும்பிடுகளின் கூஜா அல்ல நீங்கள்!
கூர் வாள் நீங்கள்.
சர்வாதிகாரம் எந்த வேடம் புனைந்து
வந்தாலும்
தந்திரங்களையெல்லாம்
தவிடு பொடியாக்கும்
தலைவர் நீங்கள்.
"அந்த ஆண்டவன் சொல்றான்
இந்த அருணாலம் கேட்கிறான்"
இந்த கணினிப்பொறிகளில்
ஒலிக்கும்
மக்கள் எனும் அருணாசலம்
வெறும் சாமி அல்ல‌
இந்த சூடம் சாம்பிராணிகளுக்குள்
சுருண்டு மயங்கிக்கிடக்க.
அந்த "எஜமானன்" அழைக்கிறான்.
உங்கள் கன்னம் புடைக்க நரம்பு துடிக்க‌
சீற்றத்துடன் புறப்படுங்கள்.
எங்கள் கனவு உங்கள் கையில்.
வாழ்க ரஜனி!
வெல்க ரஜனி!

=========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக