ஞாயிறு, 2 ஜூன், 2019

நம்பிக்கை என்னும் ஒரு அவநம்பிக்கை.

நம்பிக்கை என்னும் ஒரு அவநம்பிக்கை.
=====================================================ருத்ரா

நம் இந்து மதத்துள்
எல்லா மதங்களும்
உண்டென்றால்
"நாத்திகம்"
மதமும் இருக்கிறது
என்று தானே அர்த்தம்.
அப்புறம்
ஏன் இவர்கள்
மனம் புண்பட்டது என்று
பிலாக்கணம் வைக்கிறார்கள்.
இறைவன் இருக்கும் ரகசியம்
என்னவென்றால்
இறைவன் இல்லாத‌தே ஆகும்
என்பது தானே.
சிதம்பர ரகசிய திரை விலகியதில்
வெற்றிடம் தானே
அடுக்குத்தட்டுகளின்
அலங்கார தீப ஆரத்தியுடன் தெரிகிறது.
ஆம்.
அது போல்
நம்பிக்கையின் அடித்தளம்
அவநம்பிக்கையே.
என்னவோ இருக்கிறது
என்ற நம்பிக்கையில்
அந்த என்னவோ என்பதே
அவநம்பிக்கை.
விஞ்ஞானிகளுக்கு
இந்த அவ நம்பிக்கையில்
தான்
குவாண்டம் எனும்
ஆற்றல் குழம்பியத்தின்
சமன்பாடுகளுக்கு
தீர்வு காணப்படுகிறது.
மெய்ஞானியோ
கட்டாந்தரையில்
அவநம்பிக்கையுற்று
மான் தோல் விரித்து
அமர்ந்தவுடன் தான்
அவநம்பிக்கையை
பொறுமையாய் உரித்து உரித்து
தனக்குள் அமிழ்ந்து போகிறான்.
அந்த மன உருவெளியில்
ஏதோ நெருடுகிறது.
அதை குண்டலினி என்கிறான்.
அந்த பிரம்மாந்தரம்
ஏறியவர்கள் என்று சொல்பவர்கள்
அவநம்பிக்கையுடன் தான்
ஒலிக்கிறார்கள்.

ஈஸாவாஸ்யம் 12 வது மந்திரம் இது.

அந்தம் தமஹ ப்ரவிஸந்தி
யே அஸ்ம்பூதிம் உபாஸதி.
ததோ பூய இவ தே தமோ
ய உ சம்பூத்ய ரதாஹ‌

இந்த பிரபஞ்சம் இல்லை என்பவன்
ஒரு இருட்டில் தான் விழுகிறான்.
ஆனால்
இந்த பிரபஞ்சம் இருக்கிறது என்பவன்
அதை விட இன்னொரு இருட்டில் வீழ்கிறான்.

அதாவது தூய பிரம்மம் என்பது
தூய இருட்டு எனும் தூய வெளிச்சமே

பார்த்தீர்களா?
கடவுள் இருக்கிறது என்பவனும்
கடவுள் இல்லை என்பவனும்
இன்னும் நாம் எதையும் அறியவில்லையே
என்னும் இருட்டுக்குள் தான்
கிடக்கின்றனர்.
நாத்தின் இருப்பது சாதாரண இருட்டு.
ஆத்திகன் இருப்பதோ கும்மிருட்டு.

நாத்திகன் கிடைக்கும்
கொஞ்ச வெளிச்சத்தில்
எல்லாவற்றையும்
அறிந்து கொள்கிறான்.

ஆத்திகனோ அந்த‌
கும்மிருட்டே போதும் என்று
கண் மூடி கிடக்கின்றான்.

நம்பிக்கை அவநம்பிக்கை

கடவுள் கடவுளில்லை

ஆத்திகம் நாத்திகம்

ஆகிய அதுவும்

அர்த்தங்கள் இழந்து நிற்கின்றன.

======================================




अन्धं तमः प्रविशन्ति येऽसम्भूतिमुपासते ।
ततो भूय इव ते तमो य उ सम्भूत्या रताः ॥

andhaṃ tamaḥ praviśanti ye'sambhūtimupāsate |
tato bhūya iva te tamo ya u sambhūtyā ratāḥ ||

(12th mantra, Isha Upanishad)

‘Into deep darkness do they enter who worship the asambhuti. (the world of Becoming as detached from Being). Into still greater darkness, as it were, do they enter who delight in sambhuti. (pure Being or Brahman).’


==========================================================

https://www.wisdomlib.org/hinduism/book/isha-upanishad/d/doc122467.html

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக