வெள்ளி, 7 ஜூன், 2019

பொறி




பொறி 
================================================ருத்ரா 



புதல் மறைத்து வேட்டுவன் 
புள் சிமிழ்த்தற்று..

எத்தனை குரல்கள்?
எத்தனை பாட்டுகள்?
எத்தனை வேடங்கள்?

நம் 
மாட்டுவண்டிப்பொருளாதாரத்திலும் 
உங்களைபிடிக்க 
அதி நவீன கணிப்பொறி.
வளர்ந்த நாடுகள் கூட 
இன்னும் 
சீட்டுக்குலுக்கிக்கொண்டிருக்கும்போது 
உங்களுக்கு 
தட்டுவதற்கு வித விதமாய் 
பட்டன்கள்.
நம் கண்ணாடி பிம்பம் தானே 
என்று 
நம் முகத்தைப்பார்த்தபோது 
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
நம் கண்களைக்  காணோம்.
நம் செவிகளைக்காணோம்.
வாயில் 
"ஓட்டுப்"பிளாஸ்திரி.
வயிற்றில் 
வர்ண வர்ணமாய் 
சோற்றுப்பிண்டங்கள்.
நாலு வேதமும் நாலு வர்ணமும் 
சேர்ந்து 
கொத்துக்கறி போட்ட 
மசாலா பிரியாணிகள்.
நீலத்திமிங்கில விளையாட்டுகளில் 
முதிர்ச்சியடையாத 
ஜனநாயக சிறுவர்கள் 
நிகழ்த்திய பேரழிவின் 
வழித்தடங்களா இவை?
ஹேக்கர்கள் 
சமைத்த கானல்நீர் கிராஃபிக்ஸ்கள்  போல்  
நம் 
இந்திய தேசம் 
இப்படியா  லாரி ஆக்சிடெண்டில் 
தலை நசுங்கிப்போன 
சித்திரங்களைக்  காட்டுவது?
அதில் நசுங்கிக்கிடப்பது 
உங்கள் 
கடவுள் எனும் கரப்பான் பூச்சியும் தான்.
நம்மைக் 
கடவுள் காப்ப்பாற்றுவாராக 
என்று 
இனி எந்த கடவுளிடம் போய் 
விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாடுவது?

===============================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக