ஞாயிறு, 2 ஜூன், 2019

வட போச்சே!

வட போச்சே!
======================================ருத்ரா

இப்படிச்சொல்லி
உங்களை கலாய்க்கிறார்களே
தினமலர்க்காரர்கள்...
எங்கள் அன்பான அதிமுகவே!

அந்த அமைச்சர் பதவியை வைத்து
இன்னும் உங்களுக்கு
தூண்டில் எறிகிறார்கள்.
நம் தமிழின் பொங்கு மாப்பெருங்கடலை
"இந்து" மகா சமுத்திரமாக்கி
நம்மை
சாதி மதங்களின் கொட்டாங்கச்சியில்
குறுக்கப்பார்க்கிறார்கள்.
திராவிடக்கோட்டையின்
குறுக்குச்சுவர்கள்
விரிசல் விழுந்ததையே இன்னும்
விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
அந்த ஆதிக்க மொழிக்காரர்கள்.
திமுகவும் அதிமுகவும்
தமிழ்ச்சுடரில் ஒரே நெருப்பின்
கொழுந்துகள் தானே.
இனந்தெரியாத ஒரு இனக்காழ்ப்பில்
அன்று சொல்லப்பட்ட
தீயசக்தி எனும் சொல்லை
உங்களுக்குள்
இன்னும்  சொக்கப்பனை
கொளுத்திக்கொண்டிருக்கிறீர்களே!
அதில்....இன்று
தமிழையே எரித்துச்சாம்பலாக்க‌
கிளம்பியிருக்கிறார்கள்
தமிழ்ப்பகைவர்கள்.
இ.வி.எம்முக்குள்
என்ன இருந்தது?
என்ன இருக்கிறது?
என்ன இருக்கும்?
இதுவும்
அந்த கீதை  நாயகன்
கிருஷ்ணனுக்கே தெரியும்.
அப்படி இருந்தது எல்லாம்
நன்றாகவே இருந்தது.
அப்படி இருக்கிறது எல்லாம்
நன்றாகவே இருக்கிறது.
அப்படி இருக்கப்போவதும்
நன்றாகவே இருக்கும்.
அந்த வாக்கியங்களில்
மரத்துப்போன நமக்கு
குருட்சேத்திரத்தின் கூரிய
அம்புமுனைகள்
நம் ரத்தத்தை ருசிப்பதும் கூட
இன்னும் உறைக்கவில்லை.

இவர்களின்
சொக்கட்டான் உருட்டலில்
ஜனநாயகத்துக்கு அது
"அரக்கு மாளிகையா?"
அறத்தின் மாளிகையா?"
"பட்டன்" தட்டிய
வியாசர்களுக்கே  வெளிச்சம்.

==========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக