வெள்ளி, 30 ஜூன், 2017

நள்ளிரவு சிந்தனை

நள்ளிரவு சிந்தனை
================================================ருத்ரா

நள்ளிரவு.
கடிகாரத்தில் இரண்டு முள்ளும்
ஒன்று சேர்ந்து
குத்தப்போகிறது.
ரத்தமில்லாத கொலை.
கத்தியில்லாமல் காயம்.
பொருளாதாரத்தில்
ஆல்ஃப்ரெட் மார்ஷல்
ஒரு கோட்பாடு சொன்னார்.
உன் கற்பனை விலை
அல்லது
நீ கொடுக்கநினைக்கும் விலை
அதற்கு எதிராய் சந்தையின் விலை
இரண்டுக்கு இடையே ஒரு
வேறுபாடு விழும்
அதை நுகர்வோரின் மிகுதிப்பாடு
(கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்)
ஆக எடுத்துக்கொண்டு
சந்தோஷம் கொள் என்றார்.
(டிஃப்ரன்ஸ் பிட்வீன் பொடென்ஷியல் ப்ரைஸ்
அன்ட் ஆக்சுவல் ப்ரைஸ் இஸ் கன்ஸ்யூமர்ஸ் சர்ப்ளஸ்)
நுகர்வோர்களே
நீங்கள் எப்போதாவது அந்த
"மிகுதிப்பாட்டை" சட்டைப்பைக்குள்
போட்டிருக்கிறீர்களா?
இல்லை!
அப்படி உங்கள் "உளவியலுக்குள்"
விளம்பரங்கள் மூலம் கிளர்ச்சி செய்து
பெரு வணிகர்கள் ஒரு தட்டுப்பாட்டை
உருவாக்கி அல்லது பதுக்கி
அந்த "நுகர்வோர் மிகுதிப்பாடு"
எனும் "மாயமானை" உங்களுக்கு
காட்டுவார்கள்.
இந்த பொருளாதாரம் போதிப்பதெல்லம்
ஒன்றே ஒன்று தான்.
சுரண்டல் சுரண்டல் சுரண்டல் மட்டுமே!
அந்த விலைவாசி வேட்டையில்
உங்களுக்கு நுரை தள்ளும்.
அப்போது அந்த கானல் நீர் நிழலில்
தெரியும்
பொருளாதார மானின்
அழகிய புள்ளிகளே
இந்த "ஜி.எஸ்.டி" ரங்கோலிகள்.
நுகர்வோர்களே
உங்களுக்கு வேண்டுவது
பொருள்கள் அல்ல.
உங்களுக்கு உடனடியாக வேண்டுவது
"விழிப்புணர்ச்சியே"
ஒரே நாடு ஒரே வரி
என்ற குரலில் எதிரொலிப்பது
ஒரே நாடு ஒரே மொழி
ஒரே மதம் ஒரே கடவுள்
ஒரே ராமர் ஒரே கோவில்
........
மற்றதெல்லாம்
கடலில் தூக்கி எறியப்படவேண்டியவை.

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக