ஞாயிறு, 11 ஜூன், 2017

"அண்டப்பேரொளி "


"அண்டப்பேரொளி "
=====================================================ருத்ரா

இந்திய துணைக்கண்டத்தை
உப்புக்கண்டம்
போடத்துவங்கிவிட்டார்கள்
மதவெறியர்கள்.
நூற்றுக்கும் மேலான அடிகள்
உயரம் கொண்ட‌
சிவன் சிலைக்கு முன்
கண்மூடித்தனமாக‌
ஒரு மொட்டைத்தியானம் நடத்திய‌
பிரதமர் அவர்களே!
அந்த சிவன் தன் அடியாரிடமே
பிள்ளைக்கறி கேட்டு
சிவபக்தியை சோதனை செய்தானாமே!
அது போல்
இந்தியக்குடிமக்களின்
ஜனநாயகம் எனும்
இறைச்சியை உண்ண‌
மாட்டு இறைச்சியை
தூண்டில் வைத்து
கொடுங்கொன்மை செய்வது தான்
காவிகளின் ஆட்சி முறையா?
பாராளுமன்ற நடைமுறைகள் இருக்க‌
வெளியே துண்டு விரித்து 
"அரசு அறிவிக்கைகளை"
ஒவ்வொன்றாய் பரப்பி வைத்து
நாட்டுக்குள்
மோடிவித்தை காட்டுவது தான்
உங்கள் பாணியா?
கருப்புப்பணம் ஒழிப்பதாய்
ரிசர்வ் பாங்கு மூலம்
பாவ்லா காட்டியதன் பின்னணி என்ன?
அதை காவிப்பணம் ஆக்கி
வளர்ச்சி எனும்
உங்களுக்கே உரித்தான
கொழுப்பு சக்தி ஆக்கிக்கொள்ளவா?
உங்கள்
பகடைக்காய் உருட்டலின்
மிரட்டல் ஆட்சியை
மக்கள் புரிந்துகொண்டார்கள்.
உங்கள்
"மத நாயகம்"
ஒருபோதும் வெல்லாது!
மக்களின்
"மன நாயகமான"
ஜனநாயகமே
இருட்டைக்கிழிக்கும்
"சூப்பர்நோவா" எனும்
அண்டப்பேரொளி!...இதை
அண்டாது உங்கள்
மதவெறி மத்தாப்புகள் !

========================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக