ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

_______________________________________

சொற்கீரன்.



எத்தனை காலத்துக்குத் தான்

கடவுள் என்றும்

தங்கத்தேர்கள் என்றும்

இந்த‌

"லாலி பாப்"களை 

வைத்துக் கொண்டிருப்பீர்கள்?

கண்ணுக்குத்தெரியாத‌

நிகழ்வியல் காரணிகளைக்கூட‌

ப்ராபபலிடி எனும் 

கணிதக்கூறுகள் ஆக்கி

மனிதன்

அந்தக் "காலம்"என்ற

குறும்புக்காரனின்

காதுகளைத்திருகி

பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அந்த இருட்டின் புள்ளியை விட்டு

நகரவே மறுப்பதற்கா

இத்தனைப்பிரகாசமாய்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?

அறிவுடைமை எல்லாம் உடைமை

என்ற ஒளியேந்தி

நமக்கு 

விழியேந்திக்கொடுத்தானே வள்ளுவன்!

அந்த மனிதனின் பிறந்த நாளைத்தாங்கிய‌

நம் "தமிழ்ப்புத்தாண்டு"

இதோ வருகிறது.

இப்போதாவது

விழிகளைத் திறவுங்கள்!

எச்சில் தெறிக்க‌

செவிகளை காயப்படுத்தும்

இரைச்சல் துண்டுகளை

விளங்கா சொற்களாய்

நம் மீது எறியும்

அந்த புது"வருஷத்துக்கு"

பல்லக்கு தூக்கி தூக்கி

மூச்சிறைத்தது போதும் தமிழர்களே.

வாழ்க வள்ளுவம்!

வாழ்க தமிழ்!


________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக