வெள்ளி, 17 டிசம்பர், 2021

அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

 அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

ஜே கே அவர்களை 

அவரது சிந்தனைப்படிவங்களை

நன்றாக செதுக்கிக்காட்டியிருக்கிறீர்கள்.

இறப்பு என்பது நினைவுச்சுமைகளை

களைந்து விடுவது மட்டுமே என்றும்

முக்தி ஆன்மா போன்ற பூச்சாண்டித்தனங்கள்

அற்றது என்றும்

அவர் கருதுவது ஒரு தெளிவான‌

சிந்தனை ஓட்டம் என்றும்

ஒரு பளிங்குப்புத்தகம் ஒன்றை

உங்கள் விரிவுரையில்

பக்கம் பக்கமாய் புரட்டிக்காண்பித்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி.

இறப்பு பற்றி எண்ணுவது கூட‌

ஏதோ ஒரு இருட்டுக்கடை அல்வா சாப்பிடும்

இனிய நினைவு என்று

அவர் படிவங்களை வைத்து

காட்டியிருக்கிறீர்கள்.

இங்கு இரு சுமைகளை அழகாக காட்டுகிறீர்கள்,

சுமையை சுமக்காத ஒரு சுமை.

சுமையில் சுமக்கப்படும் ஒரு சுமை.

இரண்டுமே எண்ணங்கள் தான்.

இவற்றை எறிந்து விடுவதும்

மீண்டும் 

இன்னொன்றை தன் தோளில்

தூக்கிக்கொள்வதுமே

இறப்பு அல்லது இருப்பு ஆகிறது

என்று சிந்திப்பது

மிக மிக அருமை.

மீண்டும் நன்றி.


அன்புடன்

கவிஞர் ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக