வெள்ளி, 31 டிசம்பர், 2021

தமிழா!தமிழா!

 


தமிழா!தமிழா!

____________________________________________ருத்ரா

தமிழா!தமிழா!

இந்தக் குரல் உனக்கு கேட்கின்றதா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே

இமயங்களுக்கும் இமயமாக‌

உயர்ந்து நின்றவன் நீ.

இன்று வெறும் கூழாங்கற்களாய்

உருண்டு கொண்டிருக்கிறாய்.

உனக்கு எடுபிடியாய்

மந்திரம் சொல்ல வந்த இரைச்சல் மொழி

உன்னையே இரையாக்கிக்கொண்ட‌

அவலம் இன்னுமா

உனக்கு புரியவில்லை?

அறுபது வருஷம் என்றும்

தமிழ் வருஷப்பிறப்பு என்றும்

அறுபது உளறல் பெயர்களை

நாரதர் தந்த அழுக்கு மூட்டைகளாய்

முதுகில் இன்னமும் 

சுமந்து கொண்டிருக்கிறாயே.

பிலவ போய் சுபகிருது வருகிறது என்று

உன் மீது "ஜலம்"தெளித்து

ஸ்லோகம் சொல்லி 

புனிதப்படுத்த வருவார்களே

அந்த எச்சில் மொழி தெறித்தா

உன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் போகிறாய்?

"வள்ளுவன் தன்னை  உலகினுக்கே  தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" என்ற

எட்டயபுரத்து எரிமலைக்கவிஞனின்

வீறு கொண்ட நெஞ்சத்தை

எங்கே தொலைத்தாய் சொல்?

சொல் தமிழா சொல்!

அறிவொளி காட்டி

அடர் இருள் நீக்கிய‌

நம் வள்ளுவப்பெருந்தகை

நற்பெயர் ஏந்திய‌

தமிழ்ப் புத்தாண்டே வருக வருக என‌

சொல் தமிழா சொல்!


_______________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக