வெள்ளி, 17 டிசம்பர், 2021

நம் விடியல்களே

 நம் விடியல்களே

_________________________________ருத்ரா



கடவுளும் மதமும்

கை கோர்த்து நமக்கு

கத கதப்பு ஊட்டுவது போல்

உணர்கின்றோம்.

குறிப்பாக‌

நாம் துன்பங்களில்

தோய்ந்திருக்கும் போது

இந்த உணர்வு தான்

எங்கிருந்தோ நீளுகின்ற கைகளில்

"காக்டெயில்" ஏந்தி

நம்மை வண்ணக்கனவுகளில்

வலி நீக்கும் மயிலிறகுகளாய்

வருடிக்கொடுக்கின்றன.

சமரசம் செய்து கொள்ளாத‌

கெட்டி தட்டிப்போன 

அறிவு அங்கே

பொய்மை வெப்பத்தில் 

ஆவியாகிப்போய் விடுகின்றது.

உணர்ச்சிகளின் "பேரிடர்களில்"

நம் தீவுகள்

மூழ்கிப்போகும் அபாயங்களே

நம் 

வாழ்க்கைப்பயணத்தின்

மைல் கற்களாய்

நம்மை இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.

சிந்திக்கும் நிழல் ஓரங்களில்

கொஞ்சம் இளைப்பாறுங்கள்.

இந்த அறிவின் மங்கல் மூட்டங்கள்

விலகி ஓடட்டும்.

வெளிச்சங்கள் 

நம் பசிக்கு உணவு ஆகட்டும்.

அப்போது

நம் இமை விளிம்பில்

படிந்திருப்பது

நம் விடியல்களே!


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக