செவ்வாய், 21 டிசம்பர், 2021

"கல்யாண்ஜி"


திரு வண்ணதாசன் அவர்களுக்கு ..... ========================================= திரு வண்ணதாசன் அவர்களுக்கு "சாஹித்ய அகாடெமி விருது"அளிக்கப்பட்டதற்கு மிக மிக மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

"கல்யாண்ஜி" என்ற பெயரில் அற்புதமான கவிதைகள் படைத்திருக்கிறார். அவர் கவிதைகளில் மெய்மறந்து ரசித்தவை எத்தனை எத்தனையோ உள்ளன. அவர் எழுத்துக்களை அசைபோட்டதே இக்கவிதை.


"கல்யாண்ஜி"
===========================================ருத்ரா


கவிதை என்றதும்
கல்யாண்ஜியைத் தாண்டி
போக முடியவில்லை.
யாரோ முகம் தெரியாத‌வ‌ள்
வைத்துச்சென்ற‌
ம‌ல்லிகைப்பூவை பார்த்து
தெருப்புழுதியைக்கூட‌
பிருந்தாவனம் ஆக்கிவிடுவார்
காத‌லின் நுண்ணிய‌
நிமிண்ட‌ல்க‌ளை
சில சொல் தூண்டில்க‌ளில்
துடிக்க‌ துடிக்க‌
பிடித்து விடுவார்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளின்
சிற‌ந்த‌ க‌விதைக‌ளை
ச‌ட்ட‌ம் போட்டு மாட்ட‌லாம்.
இவ‌ர்
வெறும் ச‌ட்ட‌த்தை ம‌ட்டும்
மாட்டியிருப்பார்.
உள்ளே நுழைந்த‌வ‌ர்க‌ளே
உருகிக் க‌ரையும் க‌விதைக‌ள்.
யதார்த்த‌த்தை
பிச்சு பிச்சு எறிவார்.
சிந்திக்கிட‌ப்ப‌தோ
"பாரிஜாத‌ங்க‌ள்".
அவ‌ர் பெய‌ரில் ஒட்டியிருக்கும்
"ஜி"
ஏதோ ச‌ட்டையில் ஒட்டியிருக்கும்
பூச்சி அல்ல‌.
புதுக்க‌விதையின்
ஜீன்.
ஓடிப‌ஸ் காம்ப்ளெக்ஸில்
சிக்மெண்டு ஃப்ராய்டு
சித்திர‌ம் வ‌ரைவ‌து போல்
இந்த‌ ச‌முதாய‌ ந‌மைச்ச‌ல்க‌ளை
சொறிந்து விடும்
கிளி இற‌கு தைல‌ங்களின்
வார்த்தைப்பிழிய‌ல்க‌ளே
இவ‌ர் "ந‌வ‌ர‌க்கிழிச‌ல்க‌ள்".
த‌ட‌ம் புரியும் வ‌ரை
ஒத்த‌ட‌ம் சுக‌மான‌து.
தி.லி டவுன்
வாகையடி முக்கு
அல்வாக்கடை
இவையெல்லாம்
இவர் எழுத்துக்களை
வாசனை பிடித்துக்கொண்டே இருக்கும்.
அல்வாப்பொட்டல காகிதத்தின்
துணுக்கு எழுத்துக்கள் கூட
இவரைச்சொல்லியே
இனிக்கும்.
எழுத்துக்களே எழுத்துக்களுக்கு
அல்வா கொடுக்கும்
அவர் அக்குறும்பில்
"குறுக்குத்துறை"
முக்குளிப்புகள் ஏராளம்.

====================================

23 நவம்பர் 2012 ல் எழுதியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக