வெள்ளி, 17 டிசம்பர், 2021

ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

 ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

____________________________________________

ருத்ரா



ஜே கே ஒரு திறவுகோல்

ஆனால் 

அதை வைத்து ஒரு 

சிறிய ஜன்னலைக்கூட‌

திறக்க முடியாது

என்று அவரே எண்ணுகிறார்.

ஆம் 

இந்த "எண்ணுதல்கள்"தான் சிறை.

இதிலிருந்து விடுபட்டு

கூடவே ஒரு நீரோடை போல் 

வருகின்ற‌

அந்த கால இழையைப்பற்றிக்கொண்டு தான்

நம் "எண்ணுதல்"களை

உற்று நோக்க வேண்டும்.

இதில்

எந்த குருவும் இல்லை

எந்த உபதேசமும் இல்லை.

வேதங்கள் இல்லை

மதங்கள் இல்லை.

இவை நம்மை 

ஏற்கனவே வளைத்துக்கொள்ள‌

நம்மீது

அச்சிடப்பட்டவை.

இந்த எழுத்துக்களை களைந்த

ஒரு நிர்வாணத்தையே

எண்ணுதல் ஆக்கி

உற்று  நோக்கவேண்டும்.

அந்த தூய பளிங்கு பிம்பம்

மனித அன்பும் 

சமுதாய நேயமும் தான்.

இந்த எண்ணுதல்கள் உரிக்கப்பட்டு

நம் மடியிலேயே கிடக்கும் 

தருணங்களும் நேரலாம்.

நாம் நம்மில் எப்போதும்

மூழ்கிக்குளித்து

திளைக்கும் போது

அந்த திளைக்கும் நிகழ்வில்

ஒரு பொது மனிதன் 

உருவாகிறான்.

கணித மொழியில்

அவன் அவனை வைத்தே

உருவாக்கிய அப்ராக்ஸிமேஷன் ஆக‌

ஒரு பிரபஞ்ச மனிதனை நெருங்கியவனாக‌

அவன்

ஆகி விடுகிறான்.


_____________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக