சனி, 4 டிசம்பர், 2021

புளு சட்டை மாறன்

 புளு சட்டை மாறன்

‍‍‍___________________________ருத்ரா


இவர் படத்தில்

பிணம் ஒரு உருவகம்.

மனிதன் 

பிறக்கும்போதே

பிணமாய் பிறந்து

பிணமாய் வாழ்ந்து

அவன் இறுதியில்

மனிதம் பற்றி நினைக்கையில்

மீண்டும் பிணமாகவே கிடந்து

பிணமாய் மறைகிறான்.

அது வரைக்கும் 

அவனைச்சுற்றி சுற்றி வரும்

மொழி 

இனம் 

சாதி மதம்

அரசியல்

லாபம்

பொருளாதாரம்

மற்றும் 

இந்த நடைப்பிண வாழ்க்கையின்

கலைடோஸ் வண்ணத்திருப்பங்களே

இங்கு

கும்மி அடித்து

கும்மாளம் போடுகின்றன.

ஒட்டு மொத்தமாய்

அரசியலின் உள்கிடக்கை

அடித்து துவைக்கப்பட்டு

அலசப்படுகின்றன.

ஒரு ஆழ்ந்த சமூகசிந்தனையாளனுக்கு

தேசியம் என்பதே

தேசிய விரோதம்.

நேசனலிசத்தின் எதிர்மறை

இன்டர்நேசனிலிசம்.

இந்த எதிர்மறையில் கூட 

முதன் முதலில் 

ஒரு நேர்முறையின் வீச்சு தந்தவன்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்றவன் தானே.

தேசியம் என்ற சொல்லில்

வெறிகிளப்பும் போர் முரசுகள்

லட்சக்கணக்காய் மனிதர்கள்

கொல்லப்பட்டு பிணங்களாய் குவியும்

அவலங்கள்.

இந்த கொலைத்தீப்பந்தங்களில்

குளிர்காயும்

தன்னலப்பேய்கள்.

இதை வைத்துக்கட்டப்படும்

அரசியல் பொருளாதாரக்

கோட்டை கொத்தளங்கள்..

இறுதியாய் இதனடியில்

நசுங்கிப்போகும் 

"மனிதம்"...

இதுவே தேசியத்தை

பச்சைக்குத்திக்கொண்டு

தேசவிரோதம் 

ஆகிப்போகிறது.

முகமூடிகளை மாற்றி மாற்றிப்

போட்டுக்கொண்டு

கடவுளும் சைத்தானும்

எதிர் எதிராய் உட்கார்ந்து

சொக்கட்டான் ஆடும் 

விளையாட்டு தான்

இங்கே தத்துவங்கள்.

இவர்கள் உட்கார்ந்து

விளையாடும் மேடை....

மனிதம் கல்லறையில் 

காணாமல் போய்விடும்

இடமே அது.

புளு சட்டை மாறன்

அப்பட்டமாய் தோலுரிந்து கிடக்கும்

சமூக அவலங்களின் 

ஒரு நீலப்படத்தை

மிக மிக காரமான 

சிவப்பு மிளகாயாக  தந்திருக்கிறார்.

உறைக்குமா இது

ஒரு விடியலுக்கு?


_____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக