புதன், 25 டிசம்பர், 2019

நீங்கள் யார்?


நீங்கள் யார்?
================================== ருத்ரா 

நான் விரும்பினால் 
ராமனை 
மடியில் வைத்துக் கொள்வேன்.
கிருஷ்ணனை 
கக்கத்தில் 
இடுக்கிக்கொள்வேன்.
இன்னும் வேண்டுமென்றால் 
அல்லாஹ்வையும் 
ஏசு கிறிஸ்துவையும் 
என் தோள்களில் 
ஏற்றிக்கொள்வேன்.
சீதை போல 
ஒரு மனைவி வேண்டுமென்பேன்.
சீதையைப்போலவே 
அம்மா வேண்டுமென்பேன்.
என் மதம் 
என் மனப்படலம்.
அதைக்கிழித்துக்கொண்டு வர 
நீங்கள் யார்?
இந்த மேடு பள்ளங்களில் 
ஏறி இறங்க 
உங்கள் புராணங்களைக்கொண்டு 
வர்ணம் பூசிய 
படிக்கட்டுகளை வைத்திருக்கிறீர்கள்.
உங்களில் சில பேருக்கு 
பீடம் கட்டி உட்கார்ந்து கொள்ள 
இங்கே உழைத்து உழைத்து 
உருக்குலைந்தவர்களின் 
எலும்புக்குவியல்கள் தான் வேண்டுமா?
ஏன் 
அதில் நசுங்கிக்கிடக்கும் 
நாராயணன்களின் 
நலிந்த குரல் கேட்பதில்லையா?
அந்தக்குரல்களை 
முதலில் கேளுங்கள்.
அப்புறம் 
உங்கள் "விஷ்ணு சஹஸ்ர நாமங்களை"
"அவன்" மீது 
நீங்கள் வாந்தியெடுக்கலாம்.

=================================================





.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக