வெள்ளி, 13 டிசம்பர், 2019

கடவுளின் கவலை

கடவுளின் கவலை
================================================ருத்ரா

கவலையுள்ள மனிதனைப்
படைத்தது ஒரு
கவலையில்லா மனிதன் எனும்
கடவுள் தான்.
ஏன்
இப்படியும் யோசித்துப்பார்க்கலாம்
ஒரு
கவலையில்லாத மனிதன்
விளையாட்டுக்காக‌
கடவுளை
கற்பனை செய்தான்.
அதற்கு அப்புறம்
அவனால்
கவலையில்லாத மனிதனாக
இருக்க முடியவே இல்லை.
ஏனெனில்
அவன் கடவுளை வைத்து
விளையாடிக் கொண்டிருக்க முடியவில்லை.
இயற்கைச் சீற்றம் விதைத்த
அச்சம் எனும் விதையில் தான்
கடவுளை அவன் கற்பனை செய்தான்
என்பதை அறிந்த போது
மனிதன்
கவலைகளின் கிட்டங்கி ஆகினான்.
கடவுளைப்பற்றி கவலைப்பட்டு
மனிதன் என்ற நிலையையே
மறந்து போனான்.
இப்போது கவலைப்படுவது
கடவுளும் தான்.
கடவுள் என்னும் எனக்கு
குடியிருக்கும் இடமே
மனிதன் தான்.
மனிதன் எனும் நிலை
மறைந்து போனதால்
எனக்கும் எங்கும் இடமில்லை
என்பதே
கடவுளின் கவலை.

=================================================ருத்ரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக