வியாழன், 16 மார்ச், 2017

உயிரலைக்குள் ஓராயிரம் உலகங்கள்.

http://www.msn.com/en-us/news/technology/how-dna-could-one-day-rebuild-cell-phones/vi-BByc2q6?ocid=spartanntp
=========================================
thanks for the above LINK
=========================================

உயிரலைக்குள் ஓராயிரம் உலகங்கள்.
=================================================ருத்ரா இ பரமசிவன்.

உயிரியலில் டி..என்.ஏ மற்றும் ஆர்,என் ஏ பற்றிய அறிவியல் உண்மைகளை
அறிந்து கொண்ட மனிதன் அந்த பிரம்மாவைப்போல் ஆயிரம் பிரம்மாக்களை படைக்கும் வல்லமை பெற்று விட்டான்.க்ளோனிங்க் முறையில் எங்கோ கொஞ்சம் துளியாய் ஒட்டியிருக்கும் டி என் ஏ விலிருந்து ஒரு கம்பளி ஆட்டை "டுயூப்லிகேட்"ஆக்கியவன் கொஞ்சம் கற்பனையைச்சேர்த்து ஆறு தலை பன்னிரண்டு கை அல்லது மனித முண்டத்தோடு யானைத்தலை குதிரைத்தலையும் ஒட்ட வைத்து விடுவான்.அதையெல்லாம் மனித நெறிமுறை களுக்கும் சமுதாய நடைமுறைகளுக்கும் (Humanistic and Social codes of civilized life) உகந்த நாகரிகத்தை காப்பாற்றும் பொருட்டே தானே போட்ட சட்டங்களால் பாதுகாத்துக்கொண்டிருக்கிறான்.ஆனால் வியாபார வெறியின் உள்விசை அந்த அறிவியலை தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறது.

அதன் உந்து விசையாக மனித உயிர்விசைக்குள் இருக்கும் டி என் ஏ _ ஆர் என் ஏ சங்கிலியின் "மறை விசை முறுக்கு சமன்பாட்டை" (ஹிட்டன் கோட்ஸ் ஆஃ ப் ஹெலிகல் டைனாமிக்ஸ்) கண்டுபிடிப்பதில் வெகு அருகில் வந்து விட்டான். இதனால் அவன் "உற்பத்தி மந்திரத்தின்" சூத்திரக்கயிற்றை பிடித்துக்கொண்டு விட்டான்.

இந்த உள் விவரங்களை மேலே உள்ள சுட்டியின் "காணொளியில்"
பாருங்கள்.

========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக