செவ்வாய், 14 மார்ச், 2017

நா முத்துக்குமாரின் "கிம்பர்லி "

ஜீவன் சிவா    1,369
  • Advanced Member
  • ஜீவன் சிவா
  • கருத்துக்கள உறவுகள்
  • 1,369
  • 3,530 posts
  • Gender:Male
  • Location:இலங்கை
  • Interests:வாசித்தல்


===================================================
மேலே கண்ட "இணைப்புக்கு" (லிங்க்) மிக்க நன்றி.
====================================================


தூர்
(கணையாழி ஆண்டு விழாவில் சுஜாதா மேடையில் படித்துப் பாராட்டிய, நா. முத்துக்குமாருக்கு அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த கவிதை)


"வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்.
 
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே! 
 
'சேறுடா சேறுடா' வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
 
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
 
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள். 
 
கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!"
  
=======================================================
கவிவேந்தன் நா.முத்துக்குமாரின் மேலே கண்ட கவிதை
இனிக்கும் எழுத்தின் காடு.உணர்ச்சிக்கதிர் வீசும் "கிம்பர்லி"
அந்த வைரத்துச் சிதறலே இக்கவிதை.



நா முத்துக்குமாரின் "கிம்பர்லி "
===========================================ருத்ரா இ பரமசிவன்.

அது என்ன
காண்டா மிருகத்துத் தோலா?
அவ்வளவு முட்கள்.
அவ்வளவு முரடு திரடுகள்.
டைனோசர் ஆரண்யத்துள்
அந்த மெல்லிய மான்குட்டியை
வருடுவது என்பது
அவ்வளவு எளிதா என்ன?
பெண்மை எனும்
ரோஜா இதழ்
சட்டென்று ஒரு மின்னல் இனிப்பை
தூவி விட
ஏழு கடல் ஏழு மலை தாவ வேண்டுமா?
"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு "
இதெல்லாம்
ப்ரோகிராம் செய்து
அந்த பூலியன் அல்ஜீப்ராவை
"தீர்வு"செய்ய முடியுமா என்ன?
தொட்டனைத்தூறும் "மனக்கேணி" அது.
மனது முறுகி
மனது திருகி
மனது உருகி
மனதுள்
மனதுகள்
மழை பெய்யவேண்டும்.
மன இதழ்கள் அவிழ...
தூரம்..தூரம் ..இன்னும் இன்னும்
போகத்தான் வேண்டும்
இருளுக்குள்
இருளையே தான்
வெளிச்சம் ஆக்க வேண்டும்.

======================================















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக