திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன்‍ 2

 பொன்னியின் செல்வன்‍ 2

_______________________________

ருத்ரா



உலகமே 

தமிழனை உச்சியில் 

வைத்துக் கொண்டாடுகிறது.

ஒரு படைப்பில்

இத்தனை நுணுக்கங்களை

நடிப்பாய் கொண்டு வரமுடியுமா

தமிழனால் என்று வியக்கிறது!

தமிழர்களே 

எங்கிருந்தாலும்

அதற்கு உங்கள் கரவொலிகளை

உரத்து எழுப்புங்கள்.

நம் தமிழனுக்குள் இருக்கும்

"நூலாம்"படை போல் உள்ள‌

அந்த மெல்லிய காய்ச்சலை

புறந்தள்ளுங்கள்.

மெல்லியது இல்லை அது.

நம்மை அன்றும் இன்றும்

இன்னும் என்றுமே

கட்டிபோட்டு ஒரு வடக்கயிறாய் 

அமுக்கி 

"தேர்" இழுப்பு விளையாட்டுக்கெல்லாம்

உட்படுத்தி சிறைப்படுத்தும்

இந்த சித்திரவதையை

என்னவென்று சொல்வது?

ஆம் அது

அநீதிதான்

அநியாயம் தான்.

அதற்கு நீங்களே காரணம்.

உன் வீட்டு எல்லா சந்தோஷங்களுக்கும் 

எல்லா துக்கங்களுக்கும்

சடங்கு நடத்த தமிழ் இல்லையா?

தமிழாளர்கள் இல்லையா?

அதெல்லாம் வேண்டாம்.

அந்த கடபுடா மொழிதான் வேண்டும்

அதற்குள் தான் கடவுள் 

சுருண்டு கொண்டு இருந்து

நமக்கு சுகம் தருகிறார் என்ற‌

மூடப்போர்வையை

அவர்களா தந்தார்கள்?

அந்த 

பொன்னார் மேனியனை

புலித்தோலை அரைக்கு அசைத்தவனை

தமிழின் ஒலிப்புக்குள்

நான் கேட்டுக்கொள்கிறேன் நண்பரே

போய் வாருங்கள் என்று

நீங்கள் ஒரு 

"தீண்டாமையை"கடைப்பிடித்தால்

இந்நேரம் வரலாறு தலைகீழ் ஆகியிருக்கும்.

அவரே தமிழிலும் தயார் என்று 

முன் வந்து விடுவாரே.

அப்போது தமிழ் மொழியின் சமூக நீதி

காக்கப்பட்டிருக்குமே.

இப்படி ஒரு ஒத்துழையாமை இயக்கம்

நடந்தாலே போதுமே.

சிந்தியுங்கள் தமிழர்களே.

சரி.

அதெல்லாம் போகட்டும்.

பொன்னியின் செல்வன்

அதோ புறப்பட்டு விட்டான்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று.

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று

பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையில்

முன்னேறிக்கொண்டு 

வந்தியத்தேவன் குதிரை போல பாய்கிறான்.

வந்தியத்தேவன் கையில் உள்ளது

"தூது செய்திகளின் குழல்"அல்ல.

உலகமெல்லாம் வெல்லபோகும்

உயர் வெற்றியின் ஊது குழல் அது.

வாழ்த்துமின் வாழ்த்துமின்

ஆஸ்கார் எனும் அந்த மர்ம மாளிகையாம்

கடம்பூர் மாளிகையை வென்று

வலம் வரவேண்டும் என்று 

வாழ்த்துமின் வாழ்த்துமின் வாழ்த்துமின்.

____________________________________________________‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக