வியாழன், 27 அக்டோபர், 2022

சிந்து நதியில் ஒரு சித்திரம்

 


சிந்து நதியில் ஒரு சித்திரம்

_________________________________________

ருத்ரா


சிந்து நதியின் மிசை நிலவினிலே

சித்திரம் ஒன்று தெரியக்கண்டேன்.

நிழலாய் நிழலாய் இருந்த நிலா

நிஜமாய் நிஜமாய் நம் தோட்டத்து

மின் மினி பூச்சியாய் வந்ததுவே.

ஏவுகணைகள் ஏவிடும் அறிவில்

தூவிவிட்டோம் நம் கனவுகளை அங்கே.

நாளை விடுவோம் நாமும் அங்கு

சிறப்பு விண்வெளி பேருந்து

தீபாவளிக்கும் போய்வரலாம்.

சின்ன சின்ன பட்டாசும் அங்கு

நிலவுக்கு வெடித்துக்காட்டிடலாம்.

நம் மத்தாப்பு கண்டு அது சிரிக்கும்.

என்றும் இனிமேல் பௌர்ணமி தான் 

இருட்டு அமாவாசைகள் இனி இல்லை.


________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக