வியாழன், 31 டிசம்பர், 2020

சுகப்பிரசவம் தான் .....

 சுகப்பிரசவம் தான் 

டாக்டர் சொல்லிவிட்டார்

இன்னும் இரண்டு மணி நேரத்தில்.

சரி தான்.

ஆனால் சுகம் என்ற‌

அந்த சொல்லில்

கன்னிக்குடம் உடைந்த போதும்

எத்தனை கண்ணீர் வெள்ளங்கள்

அந்த கடிகார முள்ளில்

சொட்டிக்கொண்டு இருந்தன?

அதனிடையேயும்

எத்தனை மகிழ்ச்சி ரோஜாக்களின்

மகரந்தங்கள்

தூள் பரப்பி வந்தன?

நம்பிக்கை 

நம்மை வருடிக்கொடுக்கும்

மயில் பீலிகளாய் இருந்த போதும்

மறைந்து உறுத்தும்

முட்களும் பிரகாசம் காட்டுகின்றன!

ஆம்.

ஹேப்பி நியூ இயர் !

ஹேப்பி நியூ இயர் !!

ஹேப்பி நியூ இயர் !!!


அந்த தடுப்பூசிக்குழல்கள்

நம் இனிய பூபாளங்களின்

புல்லாங்குழல்களாய்

அதோ அந்த சன்னல்வழியாய்

ஒலிக்கப்போகின்றன.

சூரியன்கள் பின்னால் அணிவகுக்கும்

தினமும்

இனி

மகிழ்ச்சியின் ஒளிப்பிழம்பாய்.

கொரானாக்கள்

பொறாமையில் வெந்து சாகட்டும்.

ஓ!மனிதன் எனும்

இந்த மகத்தானவனின் பிம்பம்

தான் கடவுள் என்பதா?

....என்று

அந்த முள்ளு மண்டையன் 

தலையைப் பிய்த்துக்கொள்ளட்டும்!

"இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

_________________________________ருத்ரா

(இரவு மணி 10.01 ...31.12.2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக