புதன், 23 டிசம்பர், 2020

கால் இடறு கடும்பரல் பாலை

 கால் இடறு கடும்பரல் பாலை

சுரம் கடாத்த அளிமென் தலைவன்

சிலம்பி வலைய சில்முள் மூசு

திரங்கு மரல் மலிந்த சூர்மலிக் கானிடை

நுழைந்துழி ஆங்கு தன்னெஞ்சத்து நுவலும்.

அலர்மழை தோய் அஞ்சிறை இறையவள்

என்னுள் புக்கு தன்னுள் பார்க்கும்

சுடுனெடு பானாள் கொல் உமிழ் கங்குல்

அவள் பூஞ்சேக்கை முளி பெயர்த்து

பாம்புரி செத்து பிணைதரக் காயும்.

பிரிவிடை அடையல் இறந்துபட்டொழியும்

அன்ன அவள் உறும் நிலை என்னையும் 

ஈண்டு துண்டுபடுத்து எடுக்கும் இக்கொடுவாள்

வேண்டேன் ஆயிழை தழூஉம் அவிர் நசை வாட்ட‌

விரையும் மன்னே அவள் ஊர் இன்றே.


______________________________________ருத்ரா


பொருள்வயின் பிரிந்து பாலை வழி ந‌டந்து வரும் 

தலைவன் பிரிவுத்துயரில் மீண்டும் தலைவியை

நோக்கி அவள் ஊர் திரும்பிவிடும் துடிப்பில்

விரைகிறான்.

இதுவே எனது இந்த சங்கநடைச்செய்யுட்கவிதையின்

கருப்பொருள்.

________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக