ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கண்ணாடி

 


கண்ணாடி சொன்னது.

"முகம் மட்டும் தான் காட்டுகிறாய்.

உன் மனம் மறைத்து நிற்கிறாய்."

எனக்கு கோபம் வந்தது.

ஒரு குத்து விட்டேன்.

கண்ணாடி சில்லு சில்லாய் ஆனது.

நூற்றுக்கணக்கான சில்லுகளில்

இப்போது

என் மனம் தெரிந்தது.


______________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக