சனி, 5 டிசம்பர், 2020

சிலுவையிலிருந்து ஒரு குரல்

 சிலுவையிலிருந்து ஒரு குரல்

_____________________________________ருத்ரா



இந்த தமிழகத்தை ஆண்டவனாலும் 

காப்பாற்ற முடியாது 

என்று ஆண்டவனை அழைத்த‌

ரஜினி 

இப்போது புரிந்து கொண்டிருப்பார்

அந்த ஆண்டவனையே 

அந்த ஆண்டவன் காப்பாற்ற முடியாது

என்று.

ஏனெனில் 

மானிட சமநீதியின் மனசாட்சிகளை 

கொல்லும் செயலை

ஆத்மிக அரசியல் என்று முத்திரை காட்டச்சொல்லி

அந்த ஆண்டவனின் முதுகில் குத்தும்

செயல் அல்லவா இது

என்று 

ரஜினி அவர்கள் மனம் நொந்ததன் 

வெளிப்பாடு தான்

என் உயிர் போனாலும் கவலையில்லை

என்ற அவர் பிரகடனம்.

அவர் இதயம் 

அந்த நெருக்கடியாளர்களின்

"தட்டில்" பறித்து வைக்கப்பட்டு விட்டது.

அதன் துடிப்புகளும் குரல்களும்

இனி

அவர்களின் உதட்டசைவுகளே.

தமிழர்களே என்னை மன்னியுங்கள்.

ரஜினி அவர்கள் மனத்துக்குள் 

இப்படித்தான் சொல்லியிருந்திருப்பார்.


இப்போது அந்த‌

தேவகுமாரனும்  இப்படித்தான் சொல்லுவான்.

தமிழர்களை சிலுவையில் ஏற்றத்துடிக்கும்

இந்த தமிழ் எதிரிகளின் கையில்

இந்த ரஜினி சிக்கிக்கொண்டிருக்கும்

இந்த வரலாற்றின் வக்கிரநிகழ்வுகளுக்கு

காரணமானவர்களை

பிதாவே நீங்கள்

ஒரு போதும் மன்னிக்கத்தேவையில்லை.


___________________________________________












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக