வியாழன், 24 டிசம்பர், 2020

"தொ.ப"

 "தொ.ப"

_________________ருத்ரா


இவர் யார்?

இந்தக்கேள்வி ஒரு பொறி.

நம் தமிழ்த் தொன்மையின் 

வெளிச்சத்திற்கு

தீக்குச்சி உரசியவர்.

நம் காலடியில் நம் அடையாளங்கள்

எலும்பு மிச்சங்களாய்

சிதறிக்கிடந்ததை

சித்திரம் ஆக்கி சிற்பம் ஆக்கி

நிமிர்த்தி வைத்தவர்.

அழகர் கோயில்..

அறியப்படாத தமிழகம்..

பண்பாட்டு அசைவுகள்..

என்று

இவர் இதயம் இன்னும்

நமக்காகத் துடித்துக்கொண்டு இருக்கிறது.

"எனக்கு கண்ணீர் வேண்டியதில்லை.

நம் தமிழுக்கு சாவு மணி அடிக்கும் முன்

தமிழ் எனும் செம்புயலாய்

சீறி எழுங்கள்"

என்று அவர் சொல்வது மட்டுமே

நம் காதில் விழுகிறது.


____________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக