வியாழன், 17 டிசம்பர், 2020

இதோ வருகிறேன்.

 இதோ வருகிறேன்.

________________________________ருத்ரா



உன் கண்களைப் பார்த்தேன்.

உன் கண்கள் என்னைப்பார்த்ததையும்

பார்த்தேன்.

அப்புறம் என்ன வேண்டும்?

ஒன்றும் தேவையில்லை.

உள்ளம் பொங்கி வழிந்தது.

கண்களுக்குள் ஏழுகடல்கள்

ஓங்காரம் இட்டன.

அழகிய கடல் பரப்பில்

கடல் காக்கைகள் இங்கு அங்கும்

சிறகடித்துப்பறந்தது

என் இதயப்பரப்பில் சில கீறல்களை

ஓவியமாக்கின.

உன் பார்வைக்குள்

தெரிந்த சிரிப்பு

ஆயிரம் ஆயிரம் ரோஜாக்களை

மழை பெய்தன.

அதற்குள் என்ன அர்த்தம் இருக்கிறது?

பொறுக்கமுடியாத கனமான தருணங்கள்

வண்டுகளாய் குடைந்தன.

அந்த இமைத்துடிப்புகள் கூட‌

உன் பார்வையின் தேன்மழையில்

இனிப்பின் பிரபஞ்சத்தை

பஞ்சுமிட்டாய் பிசிறுகளாய்

என் உதட்டோரம் தூவி

சூடேற்றின.

இன்னொரு முறை

உன்னை நேருக்கு நேராய்..

என் கண்களில் அம்பு கோர்த்து

எய்யப்போகிறேன்.

கண்ணே!

இந்த 

"வர்ம் ஹோல்" வழியே

வேறு பிரபஞ்சம் சென்றுவிடலாம்.

சோற்றுக்கவலை இல்லாத‌

அந்த இடத்தில்

நம் காதலை மட்டும்

பொங்கி சமைத்து 

காதலை மட்டும் 

கண்களால் உண்டு மகிழ்ந்திடலாம்.

இதோ வருகிறேன்

உன் கணகளைத்தேடி!


__________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக