செவ்வாய், 22 டிசம்பர், 2020

கறங்கு வெள்ளருவி

 கறங்கு வெள்ளருவி முழங்குதரு முரசின்

மயிர்க்கண் அதிர்ந்து ஒலித்தாங்கு அமைய‌

அடர் கான் உய்த்து அவிழ்தரும் அஞ்சிறைச்

சிறுகருந்தும்பி கல்லெனும் கடுவிருள்

புகுதந்து யாழ கருங்கோட்டுச் சீறியாழ்

நோதகச்செய்தல் அன்ன அவன் நகை செய்யும்.

முன்றில் வேங்கை வீமழை உகுத்த‌

சொரியல் நனைந்து அகம் வெந்த‌

அளிநிலை கூட்டும் எவ்வம் படர்ந்து

தீச்செறீஇ நினைவின் ஆழக்

கிடந்தேன் தோழி கிளர்ந்திட மொழிவாய்.

________________________________________ருத்ரா

இது என் சங்கநடைக்கவிதை.

(காதலின் துயரம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக