திங்கள், 9 நவம்பர், 2020

தரிசனம்

 தரிசனம்

_________________________ருத்ரா


அத்தனை படியேறி

மூச்சு வாங்க நான்

நடந்தேன்.

என் கூடவே ஒருவரும் 

தோளில் ஒரு பையுடன்

நடந்தார்.

சன்னிதிக்குள் 

சுவாமியை தரிசனம் செய்து

திரும்பினேன்.

கூட வந்தவர் எங்கே காணோம்?

திரும்பிய போது

அதன் வெகு அருகில்

அவர் கீழே உட்கார்ந்திருந்தார்.

அருகில்

சில சில்லறைகளுடன்

ஒரு நசுங்கிய அலுமினியக்குவளை.

என்னிடம் இருந்த நாணயம் 

ஏற்கனவே உள்ளே கொடுத்தாகி விட்டது.

மிச்சம் இருந்தது

ஒரு பத்து ரூபாய் நோட்டு.

புன்னகையுடன் அதை

குவளையில் போட்டேன்.

அவரும் புன்னகைத்தார்.

படியேறி வந்த வழித்துணை அல்லவா

அவர்.

____________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக