செவ்வாய், 24 நவம்பர், 2020

தூண்டில்

தூண்டில் 

---------------------------------------------- ருத்ரா 

காலம் என்ற கடலில் 

காலத்தையே துண்டில் போட்டேன்.

அதில் துடித்து வந்தவையே 

இந்த கவிதைகள்.


=========================================


உடலை முடிச்சு போட்டு

உட்கார்.

உலகம் அவிழ்க்கும்.


சென்

______________________ருத்ரா


ஒவ்வொன்றும் நத்தைக்கூடு.

ஆயிரம் சூரியன் ஆயிரம் நிலவு.

கவலை இல்லை.


கவிதை.

_________________________ருத்ரா


பேனாவின் உள்ளுக்குள்

இருந்தே

உலகைப்பார்!


ஹைக்கூ

__________________________ருத்ரா


ஒரு பூணூல் போதாதா?

ஏழா வேண்டும்?

சனாதனக்கிறுக்கு பிடித்த‌ 

வானமே.


வானவில்

_________________________ருத்ரா

ஆயிரம் பேர்

__________________________ருத்ரா


சஹஸ்ரநாமம் என்று

ஆயிரம் பேர் சொல்லி

பூப்போட்டு அழைத்தான் ஒருவன்.

வரவில்லை.

அடேய்! செவிட்டுப்பயலுக்கு

பிறந்த பயலே!

என்றான் ஒருவன்.

ரோஷம் வந்து அவன்

வெடித்து

வெளியே வந்து விட்டான்.


பிக்பேங்க்

_______________________________ருத்ரா




(அழகிய படங்கள் பார்த்து எழுதிய கவிதைகள் இவை)



இது "ஃபேஸ் "புக்" அல்ல‌

அழகு பற்றி சொல்லும்

உலகத்திலேயே உள்ள 

ஒரு பெரிய நூலகம்!


_____________________________ருத்ரா 


உலகப்பேரழகியே!

உற்றுப்பார் அந்த மலரை!

அதன் பொறாமையை!

______________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக