திங்கள், 16 ஜூலை, 2018

சத்தம்.




சத்தம்.

=======================================ருத்ரா



அழுதாயா? என்ன?

உன் இமையோரம்

திரண்டு நின்ற முத்துக்கள்

அந்த ஆழத்தை காட்டி விட்டனவே!



ஸீ யு ! பை ! என்றாயே!

ஆங்கிலத்தில்

உன்னை மறைத்துக்கொண்டாய்!

அந்த "ஸீ " என்பது

இந்தக்கடல் தானா?



சங்கத்தமிழ்

"நெய்தலில்"

அத்தனைக்கடல்களின்

அலைகளும்

உன் இமையோரப்

பாட்டாய்தான்

நங்கூரமிட்டு இங்கே

உன்னை ஒலிக்கின்றன.



அந்த "கல் பொரு சிறு நுரையில்"

காயம் பட்டு  பட்டு

இந்தக் கடலெல்லாம்

ரத்தம் தான்!

என் இதயமெல்லாம்

உன் சத்தம் தான்!



=========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக