செவ்வாய், 31 ஜூலை, 2018

கலைஞர் -5

கலைஞர் -5
==========================================ருத்ரா

ஒருவர் எழுதியிருந்தார்
கட்டுமரம் கரை ஒதுங்கியது
என்று.
கவிழ்ந்து விடமாட்டேன்
கட்டுமரமாய் மிதப்பேன்
என்று சொன்ன‌
அந்தக்கவிஞனை
இந்தக்கவிஞன் கலாய்த்திருந்தான்.
"ஆமாம் உடன் பிறப்பே!
கரையில் இருந்தாலும் நீ
அவநம்பிக்கைக் கடலில்
மூழ்கிக்கொண்டிருக்கிறாயே என்று
கரை ஒதுங்கி உன்னைக்
கரையேற்ற வந்திருக்கிறேன்.
எழுந்துவா! தம்பி!"
என்று தான் அதைப்பார்த்து
எழுதியிருப்பார்.
முர்சொலியின் அச்சுச்சுவடுகள் எல்லாம்
தமிழின் நரம்புகளை
தமிழின் உள்ளத்துக் கருவுயிர்ப்பின்
தொப்பூள் கொடியாய்
இழைபின்னிக்கிடக்கிறது.

ராகுல் வந்து பார்த்தார்.
ரஜனி வந்து பார்த்தார்.
அந்த பேட்டிகள் எல்லாம்
நம்பிக்கையை
இந்தக்கூட்டத்துக்கு
பன்னீர் தெளித்தன.
ரஜனி இறைவனையும் கூட
அழைத்து வந்திருந்தார்.
நிச்சயம் அந்த இறைவன் அருள்
இவருக்கு பூரணமாக உண்டு
என்று மனம் நெகிழ்ந்தார்.

வயது காரணமாய்த்தான்
கல்லீரல் போன்றவை
கலகம் செய்கிறது என்று
"காவேரி" அறிக்கை தருகிறது.
அன்பான கல்லீரலே !
பெயரில் தானே
உன்னிடம் "கல்"இருக்கிறது.
அதுவும்
கலைஞரின் தமிழில் கரைந்து
அது காணாமல் போய்விடுமே.
நுங்குத்தமிழில்
சங்கத்தமிழை அவர்
நுவலும்போது
எங்கள் கவலைகள் யாவும்
பறந்து போகுமே!
எங்களை கலைஞரை பேசவிடு.

தமிழ் வாழ்க !
கலைஞர் வாழ்க!

======================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக