ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞர்- 3


கலைஞர்- 3
============================================ருத்ரா

இதய மருத்துவர்கள்
என்ன வேண்டுமானலும்
சொல்லிக்கொள்ளட்டும்.
தமிழ் வாழ்க!
கலைஞர் வாழ்க!
என்பதே எங்கள்
"சிஸ்டாலிக் மர்மர்"
டயஸ்டாலிக் மர்மர்"
துடிப்புகளுக்கு
எங்கள் பெயர்கள்.
எழுத்தெல்லாம்
அ"கர" முதல என்றானே வள்ளுவன்
அந்த "கர கர"ப்பான
முதல் இனிப்பே எங்கள்
முதல் வெடிப்பு.
பிரபஞ்ச கருப்பு ஸ்லேட்டில்
"பிக் பேங்"என்றாலும்
கலைஞர் என்றாலும்
எங்களுக்கு ஒன்று தான்.
காலத்தின் நீட்சிக்கு முந்திய‌
அந்த கோடோ புள்ளியோ
இல்லை
நுரைவடிவமோ
(குவாண்டம் ஃபோம் காஸ்மலாஜி)
எல்லாம்
எங்கள் தமிழின்
ஃபாசில் வடிவம் தான்.
கலைஞர் எனும்
தமிழின் அறிவியற்கருவி
எங்களிடம்
எப்போதும் உண்டு.

கோபாலபுரத்தின்
சாலைகளில் தமிழின்
முழக்கங்கள் மட்டுமே உண்டு
அழுகைக்குரல்கள் அங்கு
அடைக்காப்பதில்லை.

கலைஞருக்கு
கரம் நீட்டும்
ஆயிரம் கோடிச்சூரியன்களின்
ஒளிவிரல்கள் இங்கே
நீண்டு கொண்டே இருக்கும்.

தமிழ்த்தலைமகனே!
தங்கத்தலைவனே!
எழுந்து வா!
நிமிர்ந்து வா!
சுடர்ந்து வா!

தமிழா!
நீ நிற்கும் இந்த மண்
உன் தமிழ் மண்
என்று புரிய‌
கிருஸ்துவுக்குப்பின்னும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
உனக்கு வேண்டியிருந்தது.

அந்த "இருட்டைக்கிழித்தவன்"
இந்த தமிழன் அல்லவா.

அந்தத்தமிழும் வாழ்க!
அந்தத்தமிழனும் வாழ்க!

=======================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக