வெள்ளி, 6 ஜூலை, 2018

"மண்" கி பாத்.



"மண்" கி பாத்.
=======================================ருத்ரா


இது
தமிழ் மண்ணின் குரல்.
வில் புலி மீன் என்று
கொடி உயர்த்தி
"இமயத்தைக்கூட"
இமை உயர்த்தி பார்க்க வைத்த தமிழ்
இன்று
பத்தோடு பதினொன்றாக‌
பட்டியலிடப்பட்டு
பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சமஸ்கிருதத்தின் வேரும் கிளையும் கூட‌
இந்த மண்ணிலிருந்து தான்
தோன்றியிருக்கின்றன.
உலகத்தோர்
உயர்ந்ததோர் தனித்த
செம்மொழி இது வென
போற்றிய போதும்
இந்திய இறையாண்மை
நம் தமிழை
எங்கோ ஒரு "கியூ வரிசையில்"
நிறுத்திவைத்து
துன்புறுத்துகிறது.

"மனு"சாஸ்திரம்
என்று கொண்டாடுகிறார்களே
அந்த "மனு" என்பதன்
அடிச்சொல் வேர்ச்சொல்
எல்லாம் "மன்"எனும்
தூய தமிழ் ச்சொல்லிலிருந்து
கிளைத்தது தானே.
சிறந்த
நிலைத்த
உயர்ந்த
மற்றும்
மனம் மனிதன்
என்றெல்லாம்
பொருள்படும்
அந்த தமிழ்ச் சொற் துளி
நம் பெரு மதிப்பிற்குரிய
பிரதமர் அவர்களால்
தினம் தினம்
வானொலியாய் ஒலிக்கப்படுகிறது.
"மன் கி பாத்" என்ற தொடர்
நம் சிந்துத்தமிழின் மிச்ச சொச்சம் தான்!
இந்தியமண் தமிழ் மண் தான்!
அந்த "மண்" கி பாத் தில்
நம் தமிழ் தானே முதலில் ஒலிக்கிறது.
மோடிஜி அவர்கள் தினமும் பேசட்டும்.
அதில் நம் தமிழும் ஒலிக்கட்டும்.

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக