ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞர் -2

கலைஞர் -2
===============================================ருத்ரா

"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!"

இசை முரசு இன்னிசைச்  செல்வர்
"ஹனீ ஃ பா"அவர்களின் அந்த
கணீர்க்குரல்
ஒரு மௌனத்தேன்மழையை
காவேரி மருத்துவ  மனையில்
கலைஞரின் உள்ளுர்ணர்வுக்குள்
பொழிந்து கொண்டிருக்கிறது.
இறுக்கம் தளர்ந்து
நம்பிக்கையின் ஒரு பெரு வெளிச்சம்
படரத்துவங்கியது.

சென்னை நகரம்
தொலைக்காட்சி பெட்டிகளுக்குள்
"சேன்னல்"சதுரங்களில்
துண்டு போடப்பட்டன.
அந்த சன்னல்களின் வழியே
கலைஞரின் பழைய‌
காலண்டர் தாள்களை
நிகழ்ச்சிக்
குவியலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

காலதேவனின் எதிர்பார்ப்பு
வேறு மாதிரியாக இருக்கிறது.
இவன் மீண்டும்
தன் கர கரப்புக்குரலில்
காலம் என்ற எனக்கும்
எனக்குள்
இருக்கும்
அந்த தமிழ்த்தாகத்திற்கும்
ஒரு கவி அரங்கம் நடத்தவேண்டும்
என்று காத்திருந்து
ஜனன மரண சுவடியை தூர எறிந்துவிட்டு
அங்கே காத்திருக்கிறான்.

கிருஷ்ணன் இல்லையே
பின் அது எப்படி கோபாலபுரம்?
என்ற கேள்விஎல்லாம் கேட்காமல்
இந்துத்வாவின் அன்பு நண்பர்கள்
எல்லாம்
அங்கே அணிவகுக்கின்றனர்.
"தீய சக்தி" என்ற "ஃ ப்ரேசைக்"கூட
தூர எறிந்து விட்டு
அம்மாவின் பிள்ளைகள்
ஒரு பாச இலக்கணத்தை எழுதுகின்றார்கள்.
அடியில் எரியும்
திராவிடத்தமிழ்க்கனல் இது.

இதுவும்
ஒரு ஆனந்தக்கண்ணீர் கொண்டு
தோய்த்து எழுதும்
"தமிழின்"வரலாற்று வரிகள் தான்.
இணைய தளங்களில்
உயர்த்தினாலும்  சரி
காலாய்த்தாலும் சரி
இந்த இமயம் அந்த இமயத்தில்
வில் புலி மீன் சுவடுகளை
பதிக்க முனைந்த
அவன் சரித்திரம்
அழிக்கப்பட முடியாத ஒன்று தான்.

நலம் அடைந்து வருகிறார்
கலைஞர்.
உள்ளே சுருட்டி
அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
அவரது
உதய சூரியப்புன்னகை
இதோ
இந்த கோடிக்கணக்கான
தொண்டர்களின் முகத்தில்
ஒரு ஒளி ஓவியம்
தீட்டிக்கொண்டிருக்கிறது.

வாழ்க தமிழ்!
வாழ்க கலைஞர் !

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக