ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

மெரீனா வெறும் மணல் அல்ல‌

மெரீனா வெறும் மணல் அல்ல‌
========================================ருத்ரா



தமிழ் நாட்டின் இதயத்துடிப்புகள்
ஒலிக்கும் திடல் இது.
பார்வைக்கு
பஞ்சுமிட்டாய்காரனும்
பட்டாணி சுண்டல் டப்பாக்களும்
காதல் ஜோடிகளும்
கூடு கட்டும் இடமாக‌
தெரியலாம்.
மேம்போக்காய்
இங்கே தான் "அமைதிப்பூங்கா"
அச்சடிக்கப்பட்டு
பறைசாற்றப்படுகிறது என‌வும்
தெரியலாம்.
அதனால்
தராசு தட்டுகள்
சமன் செய்து சீர் தூக்க‌
துடி துடிக்கலாம்.
ஆனால் ஜனநாயகத்தின்
கடல் சீற்றம் ஒரு மாய‌
உடல் தாங்கிக்கிடப்பது
இங்கு தான் என்று
மக்களுக்கே தெரியும்.
பாவம் பிழைத்துவிட்டுப்போகட்டும்!
வேண்டுமானால்
ஒரு தும்மல் போட்டுவிட்டு போகட்டும்
இந்த அலைகள்
என்று
இவர்கள் கருணை காட்டுவதும்
அதையும் கூட அனுமதித்தால்
"போயே போச்சு"
என்று சொல்லுவதும்
கேலிக்கூத்துகளுக்கெல்லாம்
சிகரம் வைக்கும்
கேலிக்கூத்து ஆகும்.
மணலின் வெட்டவெளியில்
அந்த அலை இரைச்சல்கள் கூட‌
அமைதிப்படலத்தை
நார் நாராய் கிழிக்கிறதே
என்ன செய்யப்போகிறீர்கள்?


================================================

6 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மையை சொல்லிய விதம் அருமை நண்பரே

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

பாராட்டுக்கு நன்றி அன்பு கில்லர்ஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

Tamilus சொன்னது…

கவிதை மிகவும் நன்றாகவுள்ளது, வாழ்த்துக்கள்

Tamilus சொன்னது…

Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil Us

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி!

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி!

கருத்துரையிடுக