திங்கள், 30 ஏப்ரல், 2018

இன்று ஒரு விதி செய்வோம்!


இன்று ஒரு விதி செய்வோம்!






நமது 
ஜனநாயகத்தின்
முகம் எங்கே?
மொழி எங்கே ?
விழி எங்கே?
வழி எங்கே?
வாயும் செவியும் 
எங்கே?எங்கே?
சாதியும் மதமுமே 
பிண்டம் பிடித்த 
பிரம்மாக்களின் 
பித்தம் பிடித்த 
சொற்கள் இங்கே 
கற்கள் ஆகி 
கால்கள் இடறும் 
காலம் ஒரு நாள் 
மாறும் மாறும் !
அந்த அறிவின் 
சூரியனையே  
சமைத்து 
ஓட்டுகள் ஆக்கி 
உங்கள் 
விடியல் திறக்க 
ஒரு 
விதியினை இன்றே 
செய்மின்!செய்மின்!

==================================
ருத்ரா இ பரமசிவன்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக